சுகமான வாழ்வருளும் சுவாமிமலை முருகன்

Posted By: Admin, 30 Nov -0001.

நன்றி குங்குமம் ஆன்மிகம் நான்கும் நான்கும் முருகப்பெருமானின் ஆறு படைவீடுகளில் சுவாமிமலை எனும் இந்த திருத்தலம் நான்காவது. ‘‘முருகப் பெருமான் எப்போதும் நீங்காமல் எழுந்தருளியிருக்கும் திருத்தலங்கள் நான்கு. அவற்றில் நான்காவதான திருத்தலம், ஏரகம் எனும் சுவாமிமலை’’ என இளங்கோ அடிகள் சிலப்பதிகாரத்தில், ``சீர்கெழு செந்திலும் செங்கோடும் வெண்குன்றும் ‘ஏரகமும்’ நீங்கா இறைவன்’’ எனப் பாடுகிறார்.நான்கும் நாற்பதும் நான்காவது படைவீடான இந்த சுவாமி மலையில் எழுந்தருளி இருக்கும் முருகப்பெருமானை, நாற்பது திருப்புகழ்ப் ...