அதிசயம் அநேகமுற்ற பழநி

Posted By: Admin, 30 Nov -0001.

‘‘ஞானத் தபோதனரை வா என்றழைக்கும் அண்ணாமலை’’ என்று திருவண்ணாமலையைக் குறிப்பிடுவர். அந்த ஞானியர் வாழும் மலைக்கு இன்னொரு மலையை இணையாகச் சொல்ல வேண்டும் எனில் பழநி மலையை மட்டுமே சொல்ல முடியும். பழநி மலையைச் சுற்றிலும் எண்ணற்ற சித்தர்கள். குடிகொண்டு விளங்குகிறார்கள். சில இடங்களில் சித்தர்கள் வாழ்வார்கள். சில தலங்களில் வழிபட்டிருப்பார்கள். ஆனால் பழநியில் மட்டும் தான் சித்தரே முருகனை ஸ்தாபித்துள்ளார். ஆம், போகர் என்ற புகழ்மிகு சித்தர் ஒன்பது வகையான பாஷானங்களைக் (விடம்)கொண்டு உருவாக்கியதே ஞான தண்டாயுதபாணி சுவாமி ஆவார்.இந்த நவபாஷானத்தின்மீது ...